மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள அரச பாடசாலைகளில் 11 ஆம் தர மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலைச் செய்யப்பட வேண்டும் எனவும், அரசாங்கத்தின் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்...
கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தோர் விபரம்வெலிப்பனை பகுதியைச் சேர்ந்த 57 வயதான பெண்கொழும்பு 15 இல் வசித்த 76 வயதான பெண். -அரசாங்க தகவல் திணைக்களம்-
தமிழ்க் கட்சிகளுடனேயே மாகாண சபை தேர்தல்களை சந்திப்பேன் எனவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணைய தயாராக உள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில்...
இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். ‘கோவிஷஸ்ல்ட், கோவாக்சின்...
மேலும் 215 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 44,586 ஆக உயர்வடைந்துள்ளது.
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில் மோதர பொலிஸ்பிரிவு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவின் வாழைத்தோட்டம் கிழக்கு...
நாளை (04) முதல் சகல ரயில் மார்க்கங்களிலும் ரயில் சேவையில் ஈடுப்படும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரதான புகையிரத மார்க்கத்தில் 64 பயண சேவைகளும், கரையோர மார்க்கத்தில் 74 பயண சேவைகளும்...
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றிப் பெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது இந்த போட்டி தென்னாபிரிக்காவின் ஜொஹானஸ்பேக்கில் இடம்பெறுகின்றது. இதேவேளை, இங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்று மத்தள சர்வதேச விமான...
கொட்டதெனியாவ பகுதியில் உள்ள எஃகு தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு இந்தியர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.