Connect with us

உள்நாட்டு செய்தி

கருணா இப்படி பேச காரணம்?

Published

on

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலைச் செய்யப்பட வேண்டும் எனவும், அரசாங்கத்தின் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (03 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

“அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். சாதாரண மக்களே இப்போது அரசியல் கைதிகளாக உள்ளனர். இவர்கள் நேரடியாக யுத்தத்தில் சம்பந்தப்படவில்லை. காணாமல் போனவர்கள் விடயத்தில் அரசாங்கமே ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.”என்றார்.