Connect with us

உள்நாட்டுச்சினிமா

அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய வர்த்தமானி.

Published

on

அனைத்து சிவில் அரச அதிகாரிகளும் 60 வயதை எட்டியதும் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற உத்தரவு அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி நேற்று (05) பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இந்த உத்தரவு அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.எந்தவொரு அரசாங்க ஊழியரும் 55 வயதை எட்டிய பின்னரோ அல்லது அதற்குப் பின்னரோ அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெறலாம் மற்றும் அவரைப் பணியில் தக்கவைக்க உரிய அதிகாரம் முடிவு செய்யாத வரையில், அரசியலமைப்புச் சட்டத்தினாலோ அல்லது வேறு ஏதாவதொன்றாலோ குறிப்பிடப்பட்ட கட்டாய ஓய்வு வயதுடைய அதிகாரிகளைத் தவிர அனைத்து அரசு ஊழியர்களுமான சட்டம் அதற்கேற்ப 60 வயதில் ஓய்வு பெறுவதாக இருக்க வேண்டும்.ஓய்வூதியச் சட்டத்தின் 17ஆவது சரத்து முற்றாக நீக்கப்பட்டு உரிய உத்தரவு மாற்றப்பட்டு திருத்தப்பட்டு புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *