Connect with us

உள்நாட்டு செய்தி

“கூட்டமைப்புடனும் இணைந்து தேர்தலில் போட்டியிட தயாராகவே உள்ளளோம்”

Published

on

தமிழ்க் கட்சிகளுடனேயே மாகாண சபை தேர்தல்களை சந்திப்பேன் எனவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணைய தயாராக உள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாம் உருவாக்கிய கட்சி. அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டியும், விமர்சித்தும் உள்ளோம். அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் இணைந்து தேர்தலில் போட்டியிட தயாராகவே உள்ளளோம். தமிழ் கட்சியக் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். அந்த ஒற்றுமைக்காக தமிழ்த் தலைவர்கள் முன்வர வேண்டும். தமிழ்த் தலைமைகள் ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.