Connect with us

Uncategorized

உடனடியாக விடுவிக்கப்படவுள்ள பகுதிகள்

Published

on

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் மோதர பொலிஸ்பிரிவு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவின் வாழைத்தோட்டம் கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவகர் பிரிவுகள், பொரளை பொலிஸ் பிரிவின் வனாதமுல்ல கிராம சேவகர் பிரிவு, மிரிஹான பொலிஸ் பிரிவின் தமிழ் நாடு பிரதேசம் ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் பேலியகொடவத்த கிராம சேவகர் பிரிவு, மீகஹவத்த கிராம சேவகர் பிரிவு, பட்டிய வடக்கு கிராம சேவகர் பிரிவின் ரோஹண விகார மாவத்த, பேலியகொட கங்கபட கிராம சேவகர் பிரிவின் நெல்லிகஹவத்த மற்றும் பூரணகொட்டு வத்த ஆகிய பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.