கனடாவின் ஒட்டாவாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேரின் இறுதிக்கிரியைகளை அந்நாட்டிலேயே முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கனடாவில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் விகாரை நன்கொடையாளர் சபையின் ஆதரவுடன் குறித்த 06 பேரின் இறுதிக்கிரியைகளையும் கனடாவில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள்...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தீர்க்கமான 3 ஆவது மற்றும் கடைசி 20 -20 கிரிக்கெட் போட்டி தற்போது சில்ஹெட்டில் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கின்றது. இன்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார ஹெட்ரிக்...
கொழும்பு ஹைலெவல் வீதியில் கொஸ்கம மிரிஸ்வத்த பகுதியில் சீமெந்து ஏற்றப்பட்ட லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி நேற்று (08) இரவு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்....
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகள் இருவருக்கு எதிரான வழக்கின் அடிப்படை ஆட்சேபனைகள் தொடர்பான உத்தரவு மார்ச் 26 ஆம் திகதி வழங்கப்படுமென கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த...
4 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. சதொச பால் மா, காய்ந்த மிளகாய், பச்சரிசி மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது....
நாட்டின் பல பகுதிகளில் இன்று (08) பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த...
மொரட்டுவ எகொட உயன பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை பெற்றோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தம்பதியினர் பிரதேசத்தில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்ததாகவும், சந்தேக நபரான கணவர் தற்போது பிரதேசத்தை...
நாட்டில் கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 700 எயிட்ஸ் (AIDS) நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, கடந்த வருடம் 13% நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு...
பாணந்துறையில் உள்ள பாடசாலையொன்றில் 6 ஆசிரியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று உணவு இடைவேளையின் போது, அவர்கள் தேநீர் அருந்திய நிலையில், அவர்கள் பயன்படுத்திய சீனி போத்தலில் அடையாளம் காணப்படாத மருந்து வகைகள் கலக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
நுவரெலியா உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 370 ரூபா முதல் 380 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.இந்திய உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 185 ரூபா முதல் 200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.பாகிஸ்தான் உருளைக்கிழங்கு கிலோ ஒன்று...