Connect with us

உள்நாட்டு செய்தி

நாட்டில் கடந்த ஆண்டு 700 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம்

Published

on

நாட்டில் கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 700 எயிட்ஸ் (AIDS) நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, கடந்த வருடம் 13% நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு நாட்டில் 607 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் 15 முதல் 24 வயதிற்கு இடைப்பட்ட 91 ஆண்களும், 5 பெண்களும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 2023 ஆம் ஆண்டில் எயிட்ஸ் நோயினால் 59 பேர் உயிரிழந்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் சுமார் 5,705 பேர் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாலியல் கல்வி இன்மை, ஆபத்தான பாலியல் நடத்தைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமை உள்ளிட்ட காரணிகளால் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *