Connect with us

Helth

ஜனாசாகளை எரிப்பதா? புதைப்பதா? விவாதத்திற்கு முற்றுப்புள்ளி

Published

on

கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்களை புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் S.M.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

பா.உ மரிக்கார் : இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே நேற்று நீரில் கொவிட் பரவுவதில்லை என கூறியிருந்தார். அப்டியிருக்கும் போது ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி தருமாறு நான் பிரதமரிடன் கேட்டுக் கொள்கின்றேன்…

பிரதமர்: அடக்கம் செய்வதற்கு இடமளிக்கப்படும்.

பா.உ மரிக்கார் : விஞ்ஞான ரீதியான விடயங்களுக்கு செவிசாய்த்து ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்தமைக்கு பிரதமருக்கு நன்றி…