Connect with us

Helth

தலைமன்னாரில் புகையிரதம் பேரூந்து நேருக்கு நேர் மோதி விபத்து:9 வயது மாணவன் பலி

Published

on

புகையிரதம் ஒன்றுடன் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பேரூந்து ஒன்று மோதியதில் 9 வயது மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 15 இற்கும் மேற்பட்டவர்கள் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மதியம் பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

…………………………………………………..Up Date……………………………………………………..

கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பேரூந்து மோதியதில் பலர் படுகாயம் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு தலைமன்னார் நோக்கி பயனித்த தனியார் பேரூந்து கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தில் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம் அடைந்துள்ளதுடன் சிலர் மன்னார் பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முயன்ற  நிலையில் மேற்படி விபத்து இடம் பெற்றுள்ள நிலையில் தலை மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்