Connect with us

Helth

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்

Published

on

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் (09 ) மாத்திரம் குறித்த மாவட்டங்களில் 479 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் -19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (07) நாட்டில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 976 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 71,211 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் நாளொன்றுக்கு அதிகப்படியான கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், 23 மாவட்டங்களில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவானதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.

இவர்களில், கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 252 பேரும், கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 227 பேரும் மற்றும் களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த 87 பேரும் அடங்குவதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 912 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65,053 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 5,788 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்ததை அடுத்து வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 370 ஆக உயர்வடைந்துள்ளது.