Connect with us

Helth

O/l மாணவர்களுக்காக நாளை திறக்கப்படும் மேல் மாகாண பாடசாலைகள்

Published

on

மேல் மாகாணத்தில் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளை (25) முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்படி மேல் மாகாணத்தில் உள்ள 11 கல்வி வலையங்களுக்கு உட்பட்ட ஆயிரத்து 576 பாடசாலைகளில் 907 பாடசாலைகள் நாளை O/L மாணவர்களுக்காக மாத்திரம் திறக்கப்படவுள்ளன.

முழுமையான சுகாதார வழிகாட்டல்களுக்கு அமையவே பாடசாலைகள் நாளை முதல் திறக்கப்படவுள்ளன.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதி அல்லது ஏப்பிரல் மாதத்தின் ஆரம்பப் பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.

உயர்தர வகுப்புக்களை ஜூலை மாத்ததில் ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டிருப்பதாக கல்வியமைச்சர் கூறினார்.

கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற வேண்டிய கல்விப் பொதுத் தாரதர பத்திர சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம் வரை பிற்போடப்பட்டிருக்கின்றது.

எனினும், எந்தவொரு பாதிப்பும் மாணவர்களுக்கு ஏற்படாத வகையில் பரீட்சைப் பெறுபேறுகளை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.