Connect with us

உள்நாட்டு செய்தி

இடைக்கால சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம்: மைத்திரி

Published

on

அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடலுக்கு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ   இன்று அழைப்பு விடுத்துள்ள நிலையில்     சுயாதீனமாக செயற்படும் 11  கட்சிகளின் தலைவர்களுடன்  முதற்கட்டமாக கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

இடைக்கால சர்வகட்சி  அரசாங்கத்தின் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை நியமிப்பது அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய தேசிய சபையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும்   அவர் குறிப்பிட்டார்