உள்நாட்டு செய்தி
குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய இளைஞர் கைது!

குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த இளைஞர் ஒருவர், சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்பு பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபாச படங்கள் அடங்கிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை முகப்புத்தகத்தின் வழியாக வெளிநாட்டினருக்கு விநியோகித்த ஒரு நபர் குறித்து சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்து, சந்தேக நபருக்குச் சொந்தமான தொலைபேசி பதிவைப் பெற்று, நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம் அவர் கைது செய்யப்பட்டார்.