அனுராதபுரம் – பாதெனிய வீதியில் தலாவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (23) அதிகாலை பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவது தொடர்பாக நாளை (24) ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானிக்கவுள்ளது.அதன் அகில இலங்கை செயற்குழுக் கூட்டம் நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளது.இதன்போது, அமைச்சர் விஜயதாசவிற்கு எதிரான பிரேரணை முன்வைக்கப்பட்டு...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஸ்தாபிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கு புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல், ஒரு கோடியே எழு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரத்து நானூற்று பதினேழு ரூபாவை (10,769,417) நன்கொடையாக வழங்கியுள்ளது....
விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு – கரடியனாறு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலக்கடலை பதப்படுத்தும் நிலையத்தை இன்று (23) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்தார். அதனையடுத்து மைலம்பாவலி செங்கலடி...
பறவைக் காய்ச்சல் நோய் தொடர்பில் இலங்கைக்கு இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். “இலங்கை மக்களுக்கு இந்த வகையான நோய் ஆபத்து இல்லை என்பதை நாம் சொல்ல வேண்டும்....
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.வட மாகாணத்திலும் மாத்தளை...
சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தங்க நகைகளுடன் பெண் உட்பட இருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாகத் தங்க நகைகளைக் கடத்துவதாக விமான நிலைய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்...
ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 9 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு...
நாட்டின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. கடந்த நாட்களில் 100 ரூபாவிற்கு குறைவாக விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகள் விலை இன்று 300...
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சத்தியாக்கிரக போராட்டம் 13ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக அவர்கள் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தங்களை நிரந்தர ஆசிரியர்...