முக்கிய செய்தி
கடலில் குழந்தையை பிரசவித்த பெண்!
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2024/04/images-34.jpg)
யாழ்ப்பாணம் – நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தையை பிரசவித்த சம்பவம் ஒன்று நேற்று (17) பதிவாகியுள்ளது.
படகில் பயணித்துக் கொண்டிருந்த நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதனையடுத்து, அவர் நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த பெண்ணை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு நயினாதீவு பிரதேச வைத்தியசாலை வைத்தியர் பரிந்துரைத்துள்ளார்.
அதே நேரத்தில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக, குறித்த பெண் குறிகட்டுவான் நோக்கி பொதுப் போக்குவரத்துப் படகில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
எனினும் படகு பயணித்துக் கொண்டிருந்தவேளை, குறித்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது.
இதனையடுத்து படகில் பயணித்த சக பெண்கள் குறித்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
தாயும் சேயும் குறிகட்டுவான் இறங்குத் துறையை அடைந்ததும், நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.