Connect with us

உள்நாட்டு செய்தி

இந்திய வௌியுறவு செயலாளர்,பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார்.

Published

on

இலங்கைக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வௌியுறவு செயலாளர் ஷர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால தொடர்பை விரிவுபடுத்தக்கூடிய விதம் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்திய வௌியுறவு செயலாளர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோரையும் சந்திக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.

இந்திய வௌியுறவு செயலாளர் நேற்று மூன்று மாவட்டங்களுக்கு சென்றதுடன், திருகோணமலை எண்ணெய் குதங்களையும் பார்வையிட்டார்.

அவர் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோது, பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் தௌிவுபடுத்தப்பட்டதாக, இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.