Connect with us

உள்நாட்டு செய்தி

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட மஞ்சள், கடற்படையினர் வசம்

Published

on

புத்தளம் சேரக்குளி கடற்பரப்பில் கடந்த சில தினங்களாக கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காய்ந்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

சுமார் 670 கிலோகிராம் காய்ந்த மஞ்சளை கடல்மார்க்கமாக கொண்டு வர முற்பட்டுள்ளனர்.

இந்த மஞ்சள் தொகையை 2 வல்லங்களில் நாட்டுக்குள் கொண்டு வர முற்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 37 மற்றும் 57 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் கைப்பற்றப்பட்ட வல்லங்கள் மற்றும் மஞ்சளை கட்டுநாயக்க சுங்க பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.