Connect with us

Helth

நேற்று 5 கொவிட் மரணங்கள், தொற்றாளர்களின் எண்ணிக்கை எழுபத்து இரண்டாயிரத்தை கடந்தது

Published

on

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 375 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்று (10) 05 கொரோனா மரணங்கள் அதிகரித்த நிலையில் மொத்த மரணங்களின் எண்ணிக்கை மேற்கண்டவாறு உயர்ந்துள்ளது.

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 72,174 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று (10) மாத்திரம் 963 பேருக்கு தொற்று உறுதியானதாக கொவிட் தடுப்பு விசேட மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் பேலியகொட கொத்தணியுடன் 940 பேரும், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 15 அடங்குவதாக அந்த மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணிகளுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 68,155 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேபோல், ஐக்கிய அரபு இராஜியத்தியிருந்து நாட்டுக்கு வந்த 8 பேரும் நேற்று தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

6,155 பேர் தொடர்ந்தும் சிகிச்சையில் உள்ளதுடன், 65,644 இதுவரை குணமடைந்துள்ளனர்.