Connect with us

Helth

சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்ற தவறியவர்கள் கைது

Published

on

இதுவரை 1860 பேர் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கடந்த 24 மணித்தியாலத்தில் முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டில் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை கொழும்பில் இருந்து வெளியேறுபவர்களுக்கு எழுமாறாக மேற்கொள்ளப்படும் ரெபிட் எண்டிஜன் பரிசோதனை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.