Connect with us

Helth

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 185 ஆக உயர்வு

Published

on

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இறுதியாக இன்று (23) அகலவத்தை பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்தாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமையவே மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதேவேளை, மேலும் 182 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 39,228 ஆக உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

இன்று மட்டும் 588 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.