Connect with us

உள்நாட்டு செய்தி

தாக்குதல் இடம்பெற்று   இரண்டரை வருடங்கள், நீதி வழங்காமை  கவலையளிக்கின்றது

Published

on

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று   இரண்டரை வருடங்கள் கடந்துள்ள போதிலும்  இதுவரை உரிய நீதி வழங்காமை  கவலையளிப்பதாக கொழும்பு பேராயர்   மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

வாதுவை பகுதியில் நேற்று  இடம்பெற்ற  நிகழ்வொன்றில் கலந்து கொண்டு  உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் அரசியலமைப்பையும்   நாட்டு மக்களையும் பாதுகாப்பதாக வாக்குறுதி வழங்கியவர்கள் இன்று  பாராமுகமாக செயற்படுவதாகவும் பேராயர்   மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அத்துடன்   தாக்குதல்  தொடர்பிலான புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்ற  போதிலும் அனை தடுப்பதற்கு தவறியுள்ளமை மிகவும் கவலையனிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *