Connect with us

உள்நாட்டு செய்தி

தேர்தல்களை நடத்துமாறு சஜித் சவால்

Published

on

உரிய காலத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அவ்வாறு தேர்தலை நடத்தினால் தான் அரசாங்கத்தின் மீத மக்கள் வைத்துள்ள அபிப்பிராயத்தை அறிந்துகொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இந்த சந்தர்ப்பத்தில் தேர்தலை நடத்தினால் மக்களின் வேதனையை புரிந்துக்கொள்ள முடியும். ஆகவே முடிந்தால் இரண்டு தேர்தல்களையும் நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்றேன். வெறுமனே சர்வதேசத்திடம் தேர்தலை நடத்துவதாக பொய் கூறாமல் தேர்தலை நடத்துங்கள்” என்றார்.