Connect with us

உள்நாட்டு செய்தி

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் பணிப்பகிஷ்கரிப்பை அரசாங்கம் குறைத்து மதிப்பிடவில்லை – டலஸ்

Published

on

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் என்ற வகையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்க கூடிய உயர்ந்த பட்ச தீர்வை வழங்கி உள்ளது. இதனை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் பணிப்பகிஷ்கரிப்பை அரசாங்கம் குறைத்து மதிப்பிடவில்லை அதனால் நாட்டின் சிறுவர்களது கல்வி நடவடிக்கைகள் சீர்குலையும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என அவர் அனைத்து தரப்புகளையும் கேட்டுள்ளார்.