Connect with us

உள்நாட்டு செய்தி

ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் கைது

Published

on

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கைதானவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் குறித்த யுவதி ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வைத்து துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.