Connect with us

உள்நாட்டு செய்தி

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது

Published

on

காசல்ரீ நீர் தேக்கத்தின் பாதுகாப்பு பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 8 பேரை அட்டன் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு சில உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

கைது செய்யபட்ட 8 பேரும் மஸ்கெலியா, நோர்வூட், பொகவந்தலாவ, அட்டன் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் 8 பேரையும் இன்றைய தினம் அட்டன் நீதவான் முன்னிலையில் அஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அட்டன் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.