Connect with us

உள்நாட்டு செய்தி

பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்படுமா? இராணுவத் தளபதியின் அறிவிப்பு

Published

on

எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் மேலும் 2,142 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய நாட்டில் இதுவரை 215,538 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.