Connect with us

உள்நாட்டு செய்தி

அசேல சம்பத் கொம்பனி தெரு பொலிஸாரினால் கைது

Published

on

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கொம்பனி தெரு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அவர் கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.