Connect with us

உள்நாட்டு செய்தி

A/L முடிவுகள் ஏப்ரலில் – கல்வியமைச்சர்

Published

on

க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகளை இந்த மாதம் முடிவதற்குள் வெளியிடவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார்.

கண்டி கலகெதர பகுதியில் வைத்து இன்று (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே கல்வியமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அப்படியானால் சித்தியடையும் மாணவர்களுக்கு செப்டெம்பர் மாதமளவில் பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

அதேபோல் சாதாரணதர பரீட்சை முடிவுகளை எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.