Connect with us

Sports

ஒலிம்பிக் போட்டிகளை நேரில் ரசிக்க தடை?

Published

on

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட வெளிநாட்டு ரசிகர்களுக்கு வாய்ப்பளிக்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பான் அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளயியிட்டுள்ளன.

கொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் வராத சூழலில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இது பற்றி இந்த மாத இறுதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளை, எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 8 ஆம் திகதி வரை நடத்த சர்வதேச ஒலிம்பிக் குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடதக்கது.