Connect with us

Sports

கிரிக்கெட் போட்டிக்கான ஒன்லைன் நுழைவுசீட்டு விற்பனைகள் ஆரம்பம்..!

Published

on

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிக்கான ஒன்லைன் நுழைவுசீட்டு விற்பனைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நுழைவுசீட்டு கவுண்டர்கள்
இதேவேளை, கொழும்பு 07 வித்யா மாவத்தை மற்றும் தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் நிறுவப்பட்டுள்ள நுழைவுசீட்டு கவுண்டர்கள் ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளன.

வித்யா மாவத்தை நுழைவுசீட்டு கவுண்டர் அந்தந்த நாட்களில் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

T20 போட்டி நாட்களில் தம்புள்ளை பிரதேச சபை அலுவலகத்திலும் நுழைவுசீட்டு விற்பனை செய்யப்படவுள்ளன.

கிரிக்கெட் போட்டி
ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் பல்லேகல மைதானத்தில் நுழைவுசீட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளதுடன், ஒருநாள் போட்டிகள் இடம்பெறும் தினங்களில் பலகொல்ல அபித மைதானத்திலும் நுழைவுசீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நுழைவுசீட்டு கவுண்டர்கள் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும் என்று இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

மேலும் www.srilankacricket.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து அதற்கான நுழைவுசீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *