Connect with us

Sports

ஒலிம்பிக் கிராமம் தயார்

Published

on

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் கிராமம் ஒன்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

வீரர்கள் வரத்தொடங்க இருப்பதால் இந்த ஒலிம்பிக் கிராமம் நேற்று (13) திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் விதமாக செய்யப்பட்ட பல்வேறு பாதுகாப்பு வடிவங்களின் ஒட்டுமொத்த தொகுப்புதான் ஒலிம்பிக் கிராமம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை செய்யப்ப்ட்ட வீரர்களுக்கான பாதுகாப்பு வளையமாக இந்த கிராமம் செயல்படும்.

206 நாடுகளைச் சேர்ந்த 11000 விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.