Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் ஐந்து ஒப்பந்தங்கள்

Published

on

இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுற்றுலாத்துறை, முதலீட்டு, தகவல் தொழிநுட்பம், பல்கலைக்கழக உறவு மற்றும் கைத்தொழில்துறை ஆகிய துறைகள் தொடர்பாகவே ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடனான இரு தரப்பு சந்திப்பின் பின்னரே மேற்படி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இதேவேளை நாளை (24) காலை பாகிஸ்தான் பிரதமர் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்திக்கவுள்ளார்.