Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கையில் அமைதி நிலவுவதை சிலர் விரும்பவில்லை – மகிந்த

Published

on

இலங்கையில் அமைதி நிலவுவதை சிலர் விரும்பவில்லை. இலங்கையர்கள் சுயமாக எழுவதையும் அவர்கள் சகித்துக்கொள்வதில்லை.  கையேந்தும் நிலையையே விரும்புகின்றனர்.

இந்நிலைமை மாற வேண்டும்.  அனைவரும் ஒன்றிணைந்து பொது வேலைத்திட்டத்தின் கீழ் பயணிக்க வேண்டும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும்,  முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாவலப்பிட்டிய தொகுதி கூட்டம் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் ஏற்பாட்டில் இன்று (16) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமைதாங்கி உரையாற்றுகையிலேயே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு கூறினார்.