Connect with us

Uncategorized

ரணில் இன்று எம்முடன் உள்ளார்

Published

on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த ‘ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற மக்கள் கூட்டம் நேற்று களுத்துறையில் இடம்பெற்றது.

களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலக வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இதன் போது உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி

” ரணில் இன்று எம்முடன் உள்ளார். ஆகவே அவரின் செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்போம். காரணம் ரணில் இன்று சரியான பாதைக்கு திரும்பியுள்ளார்’ என கூறினார்.