Connect with us

உள்நாட்டு செய்தி

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளனர்

Published

on

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 453 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தோர் விபரம்

01.வத்தளை பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஆண்ணொருவர், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

02.நுவரெலியாவைச் சேர்ந்த 76 வயதான ஆண்ணொருவர், நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 20ம் திகதி உயிரிழந்துள்ளார்.

03.வலப்பனை பகுதியைச் சேர்ந்த 83 வயதான ஆண்ணொருவர், நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 21ம் திகதி உயிரிழந்துள்ளார்.