Connect with us

முக்கிய செய்தி

உயர்தர வினாத்தாள் திருத்தம் 54 நாட்கள் தாமதம்; பல்கலைக்கழக விரிவுரையாளர்களை பங்கேற்குமாறு வேண்டுகோள் !

Published

on

2022 G.C.E A/L மதிப்பீட்டில் பங்கேற்குமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்களை பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

பரீட்சைகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்த பரீட்சை சித்தியாளர்களின் பங்களிப்புடன் தாள் குறியிடல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தாள் குறியிடல் செயல்முறை 54 நாட்கள் தாமதமானது, உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக முழு கல்வித் துறையும் ஸ்திரமற்ற தன்மையை எதிர்கொண்டுள்ளதாகவும் பரீட்சை தலைவர் கூறினார்.

கல்வி அமைச்சு விடைத்தாள் ஒன்றிற்கான கொடுப்பனவை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய வரித் திருத்தம், மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் தற்போதைய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட மக்கள் விரும்பத்தகாத முடிவுகள் பலவற்றிற்கு எதிராக மார்ச் 15 அன்று தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தலைமையில் நாடு தழுவிய ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் கூட்டமைப்பு (FUTA) இணைந்ததால் தாள் குறியிடல் செயல்முறை நிறுத்தி வைக்கப்பட்டது. 

மறுநாள் டோக்கன் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து சேவைகள் வழமைக்கு திரும்பிய போதிலும், தமது கோரிக்கைகளுக்கு திருப்திகரமான தீர்வுகள் வழங்கப்படாததால் FUTA தனது தொழிற்சங்கப் போராட்டத்தைத் தொடர முடிவு செய்தது.

FUTA தனது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டு, ஏப்ரல் 17 முதல் மீண்டும் கல்வி நடவடிக்கைகளில் சேர முடிவு செய்தது.

எவ்வாறாயினும், உயர்தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டில் பல்கலைக்கழக கல்வியாளர்களின் பங்கேற்பு குறித்த தீர்மானம் திருப்திகரமான முடிவு எட்டப்படும் வரை ஒத்திவைக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.