Connect with us

உள்நாட்டு செய்தி

தைமூர் போர்க்கப்பல் இலங்கையில்

Published

on

பாகிஸ்தான் கடற்படையில் இணைவதற்காக சீனாவில் இருந்து தனது முதல் பயணத்தை ஆரம்பித்த தைமூர் போர்க்கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கப்பல் எதிர்வரும் 15 ஆம் திகதி பாகிஸ்தான் நோக்கி பயணமாகவுள்ளது.

தைமூர் யுத்தக் கப்பல் இலங்கைக்கு வருகை தருகின்றமை தொடர்பில் இந்தியா உன்னிப்பாக அவதானித்திருந்தது. 

தமது நாட்டின் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு பங்களாதேஷ் மறுப்பு தெரிவித்ததன் காரணமாகவே குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை நோக்கி திருப்பப்பட்டது.