Connect with us

உள்நாட்டு செய்தி

பிரியந்த குமாரவின் உடற்பாகங்கள் நாளை நல்லடக்கம்

Published

on

பிரியந்த குமாரவின் உடற்பாகங்கள் நாளைய தினம் (08) கனேமுல்லை பொல்ஹேன பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் உடற்பாகங்கள், கனேமுல்லை கந்தலியத்த பாலுவ பிரசேத்திலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு இன்று (07) அதிகாலை 2.30 மணியளவில் கொண்டு செல்லப்பட்டன.

பிரியந்த குமாரவின் உடற்பாகங்கள் நேற்று (06) மாலை 5 மணியளவில் ஶ்ரீலங்கன் விமான சேவை மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.