Connect with us

உள்நாட்டு செய்தி

சபாநாயகர் விசேட அறிவிப்பு

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சற்று முன்னர் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பு ஒன்றிலேயே சபாநாயகர் இதனை கூறியுள்ளார்.

(ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் எனக்கு கிடைத்தது. அதன்படி நேற்று (14) முதல் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியுள்ளார். அரசியல் அமைப்புக்கு அமையவே ஜனாதிபதி பதவி விலகியுள்ளார்.

ஆகவே இப்போது முதல், புதிய ஜனாதிபதியை தெரிவுச் செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் முடிவடையும் வரை அரசியல் அமைப்பிற்கு அமைய பிரதமர் ஜனாதிபதிக்குரிய கடமைகளை நிறைவேற்றுவார். விரைவில் புதிய ஜனாதிபதி தெரிவுச் செய்யப்படுவார். அனைத்து செயற்பாடுகளும் ஜனநாயகத்திற்கு உட்பட்டே நடைபெறும். பாராளுமன்றம் நாளை (16) கூடவுள்ளது. 7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்) என தெரிவித்துள்ளார்.

)