Connect with us

உள்நாட்டு செய்தி

பதுளை கந்தகெட்டிய பகுதிக்கு மண் சரிவு எச்சரிக்கை

Published

on

நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பெரும்பலான பிரதேச செயலகங்களுக்கு நேற்று மாலை விடுக்கப்பட்ட மண் சரிவு அவதான எச்சரிக்கை நாளை (22) வரை நீடிக்கப்பட்டுள்ளது.