Connect with us

உள்நாட்டு செய்தி

22 பிரதேச செயலக பிரிவுகளுக்கு தொடர்ந்தும் மண் சரிவு அபாய எச்சரிக்கை

Published

on

சீரற்ற காலநிலையால் இதுவரை 1,444 குடும்பங்களைச் சேர்ந்த 5,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்தவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட 22 பிரதேச செயலக பிரிவுகளுக்கு தொடர்ந்தும் மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.