Connect with us

உள்நாட்டு செய்தி

மலையகத்தில் போதைப்பொருள் பாவனை இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சூனியமாக்கியுள்ளது- வடிவேல் சுரேஸ்

Published

on

மலையகத்தில் போதைப்பொருள் பாவனை ஒழிக்கப்பட வேண்டும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

பதுளை வேவஸ்ஸ தோட்ட பகுதியில் அண்மையில் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இன்று (25) அங்கு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதன்போது அங்கு சென்றிருந்த வடிவேல் சுரேஸ் மேற்கண்டவாறு கூறினார்.

“மலையகத்தில் ஆங்காங்கே அதிகரித்துவரும் போதைப் பொருள் பாவனை இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சூனியமாக்கியுள்ளது. பல சம்பவங்கள் அங்கே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆகவே உடனடியாக இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி இடப்பட வேண்டும்”என்றார்.