Connect with us

உள்நாட்டு செய்தி

எதிரணிகள் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க வேண்டும்: எஸ்.பி. திஸாநாயக்க

Published

on

தேசிய அரசு என்பதற்கு அப்பால், தற்போதைய சூழ்நிலையில் எதிரணிகள் நிபந்தனையற்ற ஆதரவை அரசுக்கு வழங்க வேண்டும்.” – என்று கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். 

நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நஷ்டத்தை அரசு தாங்கி வருகின்றது. இவ்வாறான நெருக்கடி நிலையில் இருந்து  கட்டங்கட்டமாகவே மீள வேண்டும்.  

இது நெருக்கடியான கால கட்டம், எனவே, தேசிய அரசு என்பதற்கு அப்பால் எதிரணிகள் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க வேண்டும்.

நெருக்கடி நிலைமையை நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும்.  தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நல்லாட்சி அரசும் பொறுப்புக்கூற வேண்டும்.” என்றார்.