Connect with us

உள்நாட்டு செய்தி

மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால் முன்னிற்போம்: மைத்திரி

Published

on

“நாங்கள் ஆட்சியில் இருக்கின்ற கட்சியாக இருக்கின்றோம். தற்போது உள்ள ஆட்சியாளர்களுக்கு எந்தக்  கஷ்டத்தையும் கொடுக்க மாட்டோம். நாங்கள் மக்களது பிரச்சினையைக் கதைப்போம். மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால் அதனைப் பேச முன்னிற்போம்.

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் வன்னி மாவட்ட மாநாடு வவுனியா நகர சபை மண்டபத்தில் நேற்று (19) நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.