Connect with us

உள்நாட்டு செய்தி

கர்தினால் எடுத்துள்ள திடமான முடிவு

Published

on

ஜனாதிபதி தலைமையில் நாளை (04) நடைபெறும் தேசிய சுதந்திர தின நிகழ்வில் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கலந்துகொள்ளமாட்டார்.

கத்தோலிக்க சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ, கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இந்த தகவலை வெளியிட்டார்.

அத்துடன், சுதந்திர தினத்தன்று பேராயரின் பங்கேற்புடன் நடத்தப்படும் தேவ ஆராதனையும் இடம்பெறாது எனவும் அவர் கூறினார்.

பொரளையில் தேவாலயமொன்றில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெறவில்லை என சுட்டிக்காட்டி, அதற்கு எதிர்ப்பை வெளியிடும் விதத்திலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.