Connect with us

உள்நாட்டு செய்தி

இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினவிழா…

Published

on

இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினவிழா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தலைமையில் டெல்லி ராஜபாதையில் நடைபெற்றது.

குடியரசு தின விழாவையொட்டி ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு, பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, நாட்டின் பண்பாட்டை பறை சாற்றும் கலைநிகழச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாவில் முகக்கவசம் கட்டாயம் என்று வரையறுக்கப்பட்டு பின்பற்றப்பட்டது.

இதுவரை இல்லாத வகையில் முதன் முறையாக வானில் 75 போர் விமானங்கள் அணிவகுத்து வீரசாகசங்கள் வானில் நடத்திக் காட்டப்பட்டது.
அதனை தொடர்ந்து, நாட்டுப்பண் இசைக்கப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் ஆகிய சவால்களுக்கு இடையே இந்த விழா பலத்த பாதகாப்புக்கு மத்தியில் நடைபெற்றமை விசேட அம்சமாகும்.