கொலன்னாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உள்ளிதுவா ஆற்றில் 15 வயதுடைய சிறுமியின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 08ஆம் திகதி மாலை சிறுமி காணாமல் போயுள்ளதுடன், அவர் நீரில் மூழ்கி தான் உயிரிழந்தாரா என்ற உண்மைகள் இதுவரை வெளியாகவில்லை....
காலி கராப்பிட்டி பகுதியில் கட்டுமான தளத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் புதையுண்டுள்ளனர். மண் மேட்டின் கீழ் புதையுண்டிருந்த இருவர் மீட்கப்பட்டு கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
தென்கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் உள்ளவர்களிடமிருந்து பணம் மோசடி செய்த பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனைத்...
கொழும்பின் சில பகுதிகளில் இன்று(09) மாலை 05 மணி முதல் நாளை(10) காலை 09 மணி வரை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில்...
இன்று(09) முதல் அமுலுக்கு வரும் வகையில், மதுபானசாலைகளை திறக்கும் நேரத்தை மாற்றியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கலால் கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்களுக்கு அமைய நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல், தேசிய கொள்கை அமைச்சர் என்ற...
புதிய மின்சார சட்டமூலத்துக்கு அமைய, மின்சார பட்டியலில் புதிதாக 6 வகையான வரிகள் உட்படுத்தப்படுவதாக மின்சார பாவனையாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்துரைத்த, அந்த சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர்.அத்துல...
அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலும், அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல் என்பன நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உலக தமிழர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் சிறந்த இலங்கைக்கான மகா...
மாத்தறை – இரத்தினபுரி பிரதான வீதி (ஏ-17) மண்சரிவு காரணமாக ‘அனில் கந்த’ 85 ஆவது தூண் பகுதியில் தடைப்பட்டுள்ளது. இதன்காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்காலிகமாக மூடப்பட்டுள்ள களனிப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் எதிர்வரும் திங்கட்கிழமை (11) கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 5ஆம்...
தனியார் பேருந்துகளில் இடம்பெறும் பல்வேறுசட்டவிரோத நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தனியார் பேருந்துகளில், பயணிக்கும் பயணிகள் தமது முறைப்பாடுகளை உடனடியாக தெரிவிக்கும் வகையில் ‘வோக்கி...