Connect with us

முக்கிய செய்தி

தேர்தல் குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!*

Published

on

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலும், அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல் என்பன நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக தமிழர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் சிறந்த இலங்கைக்கான மகா சங்கத்தின் தேரர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட பிரதிநிதிகளுடன் இன்று(08) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

இந்தநிலையில், தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு திருத்தங்கள் அல்லது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பவற்றை மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

உலக தமிழர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் சிறந்த இலங்கைக்கான மகா சங்கத்தின் தேரர்கள் ஆகியோர் இணைந்து இமயமலை பிரகடனத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளனர்.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, குறித்த பிரகடனத்தை அவர்கள் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட 6 முக்கிய விடயங்களை ‘இமயமலைப் பிரகடனம்’ உள்ளடக்கியுள்ளது.