பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி, சட்டமூலம் மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஜிந்துபிட்டியவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக...
அடுத்த ஆண்டு முதல் கொவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டது போன்று அனைத்து தேசிய பரீட்சைகளையும் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் நடத்தும் நோக்கில் பரீட்சை நாட்காட்டியை நெறிப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி,...
ஆனமடுவ, லபுகல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 38 வயதுடைய நபரும் அவரது 10 வயது மகனும் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி காயமடைந்துள்ளார். காயமடைந்த பெண் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள்...
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தனது சிறுநீரகத்தை விற்றவர் உட்பட இருவர் 5 கிராம் 440 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட யுக்திய சுற்றிவளைப்பின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அதே...
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள சின்யு நகரில் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். கடை அமைந்துள்ள கட்டிடத்தின் அடித்தளத்தில் இருந்து தீ...
குளியாப்பிட்டி, தீகல்ல பிரதேசத்தில் தமது மூன்று பிள்ளைகளையும் மூடிய அறைகளுக்குள் பூட்டிவைத்துவிட்டு, நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக சிவனொளிபாத மலைக்கு புனித யாத்திரை சென்ற தம்பதியினர் குளியாப்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப் பட்டுள்ளனர். மூன்று பிள்ளைகளும் 8, 5 மற்றும்...
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் இன்று அதிகாலை கந்தானைக்கு அருகில் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற...
VAT அதிகரிப்பு காரணமாக உள்நாட்டு முட்டை உற்பத்தி செலவு 08 ரூபா அதிகரித்ததன் காரணமாக, உள்ளூர் முட்டை ஒன்றின் விலையை 3.00 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. வற் வரி...
வருடாந்த இடமாற்றங்களின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்கான இடமாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களிடம் பொதுச் சேவை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரால் எழுத்து மூலம்...