Connect with us

உள்நாட்டு செய்தி

சகல அரச நிறுவனங்களும் அடுத்த ஆண்டில் சிறந்த முன்னேற்றம் அடைய வேண்டும்

Published

on

நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதன் மூலம், அரச நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டில் சிறந்த முன்னேற்றம் அடைய முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

சகல அரச நிறுவனங்களும் அடுத்த ஆண்டில் சிறந்த முன்னேற்றம் அடைய வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டிற்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று (26) அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.